சிக்கல் சிங்கார வேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரி வடம்
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து வடம் தயாரித்து அனுப்பினர். இக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இங்கு நடக்க உள்ள சித்திரை திருவிழா தேரோட்டத்திற்காக, தேர் வடம் புதிதாக தயாரிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து வடம் தயாரிக்க சிங்கம்புணரியில் உள்ள வடம் தயாரிப்பாளர்களிடம் வழங்கப்பட்டது. ஒரு மாதமாக வடம் தயாரிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இங்கு தயாரிக்கப்பட்ட 430 மற்றும் 330 அடி நீளமுள்ள இரண்டு வடகயிறுகளை சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த கயிறு உற்பத்தியாளர் அப்புச்சாமி கூறியதாவது, தேர் வடம் தயாரிப்பதற்காக உரிய முறையில் விரதம் மேற்கொண்டு வடம் தயாரிக்கும் பணிகளை தொழிலாளர்கள் செய்து வருகிறோம் என்றார்.