தர்மம் செய்ய சொல்கிறார் காஞ்சி மகாபெரியவர்
* ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.
* குழந்தையை போல் கபடம் இல்லாமல் வாழ்ந்திடு.
* கடவுளை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பலன் உண்டு.
* முன்னோர் காரியங்களில் அக்கறையும், தெய்வ செயல்களுக்கு பக்தியும் வேண்டும்.
* கடவுளின் குணங்களை கேட்பதை உன் லட்சியமாக கொள்.
* முதலில் வெளியில் அடக்கம் ஏற்பட்டால் தான் மனதில் அடக்கம் ஏற்படும்.
* வாழ்க்கை என்பது லாப, நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல.
* மற்றவர் துன்பத்தை போக்க உன்னால் ஆனதை செய்.
* மறுஉலகிலும் உற்ற துணை கடவுளின் திருநாமம் ஒன்றே.
* ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் மன அழுக்கை போக்கும்.
* உடல் உழைப்பால் பிறருக்கு சேவை செய்வது பெரும் புண்ணியம்.
* பசியை தீர்க்கத்தான் உணவே தவிர, ருசியைத் தீர்ப்பதற்கு அல்ல.
* எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இரு.
* மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதுவாகவே மாறும்.
* எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தியுடன் செயல்படாதே.