உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புருஷாமிருக வாகனத்தில் அருள் பாலித்த சென்னை காரணீஸ்வரர்

புருஷாமிருக வாகனத்தில் அருள் பாலித்த சென்னை காரணீஸ்வரர்

சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான இன்று புருஷா மிருக வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


புருஷாமிருகம் என்பது இடுப்பு வரை மனித உருவமும், கீழ் உடல் சிங்கத்தின் உருவமும் கொண்ட ஒரு அபூர்வ உயிரினம். மகாபாரதத்தில் தர்மரின் ராஜசூய யாகத்தின்போது, பீமன் இந்த புருஷாமிருகத்தை அழைத்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.  புருஷாமிருகம் ஒரு சிறந்த சிவபக்தன். புலி கால் கொண்ட வியாக்ரபாதர் என்ற முனிவரைப் போலவே, இதுவும் சிவனைத் தியானிக்கும் ஒரு ரூபம். சிவபெருமான் இந்தப் பக்தனுக்குக் காட்சி அளிப்பதைக் குறிக்கும் விதமாகவே இந்த வாகனச் சேவை அமைகிறது. சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில், சித்திரைப் பெருவிழாவின் நான்காம் நாளான இன்று காலை புருஷா மிருக வாகனத்தில் பெருமான் மாடவீதிகளை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான வரும் 27ம் தேதி தேர் திருவிழா நடக்க உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !