உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.

புதுச்சேரி இ.சி.ஆர்., கொட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவில் 41ம் ஆண்டு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 24ம் தேதி மதியம் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நாகாத்தம்மன் சுவாமி மின் விளக்கு அலங்காரத்தில் இரவு வீதியு லா நடந்தது.

நேற்று இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சாமிநாத குருக்கள், கோவில் பொருளாளர் உதயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !