நாகப்பன்பட்டி மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
ADDED :9 hours ago
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நாகப்பன்பட்டி மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி யை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருமண பாக்கியம், குழந்தை வரம், குடும்ப நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குத்துவிளக்கு ஏற்றியும் 108 மந்திரங்கள் கூறியும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது .