உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்கான் அமைப்பினர் நாடு முழுவதும் மாட்டு வண்டியில் ஆன்மீக யாத்திரை

இஸ்கான் அமைப்பினர் நாடு முழுவதும் மாட்டு வண்டியில் ஆன்மீக யாத்திரை

திருப்புவனம்: நாடு முழுவதும் மாட்டு வண்டியில் ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வரும் இஸ்கான் அமைப்பினர் திருப்புவனத்திற்கு வருகை தந்தனர்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் 1966ல் ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபாகர் என்பவரால் தொடங்கப்பட்டு உலகம் முழுவதும் பகவத் கீதையின் போதனைகளை பரப்பி ஆன்மீக சிந்தனைகளை ஏற்படுத்தி வருகிறது. 1984ல் கிருஷ்ணர் பிறந்த துவாரகையில் தொடங்கப்பட்ட மாட்டு வண்டி ஆன்மீக பயணம் இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இஸ்கான் நிறுவனரின் திருவுருவ சிலையை தாங்கிய பாரம்பரிய மிக்க மாட்டு வண்டி ஆன்மீக பயணம் நேற்று திருப்புவனம் நகருக்கு வந்தது. யாத்திரையின் போது ஹரி நாம சங்கீர்த்தனம் பஜனை பாடியபடியே வந்தனர். கிராமப்புற மக்களிடையே ஆன்மீகத்தை பரப்பும் வண்ணம் வந்த இந்த யாத்திரை பயணத்தை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். பக்தர்களுக்கு கிருஷ்ணரின் பிரசாதம் வழங்கியதுடன் ஆன்மீக புத்தகங்களையும் விற்பனை செய்தனர். பகவத் கீதையின் சிறிய புத்தகம் முதல் பெரிய புத்தகம் வரை விற்பனை செய்த யாத்திரை ராமேஸ்வரம் நோக்கிசென்றது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !