காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு வேத விற்பன்னர்கள் பாத பூஜை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற நாளையொட்டி நேற்று, 80க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள், தங்களது குடும்பத்தினருடன் வந்து சுவாமிகளுக்கு பாத பூஜை செய்து, ஆசி பெற்றனர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற நாளையொட்டி நேற்று 80க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் தங்களது குடும்பத்தினருடன் சங்கரமடத்திற்கு வந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர். அதை தொடர்ந்து சங்கர மடத்தின் சார்பில் வேத விற்பன்னர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. காஞ்சி சங்கராச் சாரியார் விஜயேந்திரர் மலர்க்கிரீடமும், மாலைகளும் அணிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் அன்னதானமும் நடந்தன.