கடலுார் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2 days ago
கடலுார்: திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடலுார், பழைய வண்டிப்பாளையம் கரையேறவிட்டகுப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 1ம் தேதி பகாசூரனுக்கு சோறு போடுதல் நிகழ்வு நடந்தது. நேற்று திரவுபதி, அர்ச்சுணர் திருக்கல்யாணம் நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு 8:00 மணிக்கு பாரிவேட்டை, திரவுபதியம்மன், அர்ச்சுணர், கிருஷ்ணர் வீதியுலா நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை 9:00 மணிக்கு அர்ச்சுணர் தபசு நிகழ்ச்சி, இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 6ம் தேதி காலை 9:00 மணிக்கு 108 பால்குடம் ஊர்வலம், மாலை 6:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா, இரவு 9:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது.