சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா; தெருவடச்சான் வீதியுலா
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, தெருவடைச்சான் வீதி உலா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும்,பல்வேறு வாகனங்களில், தினமும்சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெருவடச்சான் வீதி உலா நடைபெற்றது. கீழ வீதியில் ஜோடித்து வைக்கப்பட்டிருந்த தெருவடிச்சான் சப்பரத்தின் தேரில், வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் சுவாமி எழுந்தருளினார். அதனை அடுத்து மேல வாத்தியங்கள் முழங்க நான்கு வீதிகளிலும் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனை அடுத்து நேற்று வெள்ளி யானை வாகன வீதி உலாவும், இன்று தங்க கைலாச வாகன வீதிஉலா, 20 ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா 21 ம் தேதியும், 22 ம் தேதி அதிகாலை, ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மன் எழுந்தருளி மகா அபிஷேகம் நடைபெறும், அதனைத் தொடர்ந்து அன்று மதியம், ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடைபெறும். பின்னர், ஞான காச சித்தப்பா பிரவேசம் நடைபெறுகிறது. 23 ம் தேதி பஞ்சமூர்த்தி முத்து பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.