பரமக்குடி சிவன், பெருமாள் கோயில்களில் பிரதோஷம்
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் மாலை 4:00 மணிக்கு பிரதோஷ நந்திக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் கோயில் ரிஷப வாகனத்தில் பிரகாரத்தில் சுற்றி வந்தனர். தொடர்ந்து மகா தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் பிரதோஷநந்திக்கு அபிஷேகம் நடந்து சுவாமி வலம் வந்தார். மேலும் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில், மேலப் பெருங்கரை அட்டாள சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது. இதேபோல் பிரதோஷ காலத்தில் பெருமாள் கோயில்களில் அருள் பாலிக்கும் லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.