திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
காரைக்கால்; காரைக்காலில் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பெறும் ஆவதிப்பட்டு வரும் நிலையில் இன்று ஆடி இரண்டாம் சனிக்கிழமையில் என்பதால் திருநள்ளார். கோவிலில் பக்கர்கள் கூட்டம் அதிகாலையிலிருந்து அதிகமாக காணப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் பக்தர்கள் வருவதால் அவர்கள் குளிர்நீர்மோர் வழங்கப்பட்டது. பக்தர்களின் நலன் கருதி தேவையான இடங்களில் வெப்பத்தை தாங்கும் வண்ணம் பிரகாரம் வலம்வரும் பாதையில் தரை விரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அன்னதானம் ஆலய உள்புரங்களில் கூடுதல் மின்விசிறி மற்றும் குளிர்சாதன வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் எந்தவித சிரமமின்றி சனீஸ்வரபகவான் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.