குங்கும அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை யொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விழுப்புரம், நாப்பாளைய சந்தில் ஸ்ரீ சண்டபிரசண்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மாதம் 2வது வெள்ளியையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனையும் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.
இதேபோன்று, ஆற்காட்டம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சுவாமி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் துர்க்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல் பூட்டை மாரியம்மன் கோவில், சங்கராபுரம் பாலமேடு புற்று மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.