உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிரி தொல்லை தீர வணங்க வேண்டிய அம்மன்

எதிரி தொல்லை தீர வணங்க வேண்டிய அம்மன்

எதிரி தொல்லை தீர தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை
காமாட்சியை தரிசிப்போம்.  

வச்சிரத்தன் என்ற அசுரன் இப்பகுதி மக்களை துன்புறுத்தி வந்தான்.
கருணையே வடிவமான காமாட்சி, உக்ர வடிவில் துர்கையாக
தோன்றி அசுரனை அழித்தாள். அவனைக் கொன்ற பாவம் தீர மஞ்சளாற்றில் நீராடினாள். பின் தலையாறு நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமர்ந்து தவம் செய்தாள்.

அவளின் தவக்கோலத்தை பார்த்த சிறுவன் ஒருவனுக்கு பார்வை போனது.  இதையறிந்த ஊர் மக்கள் பயந்தனர். அவர்கள் மஞ்சளாற்றங்கரையில் நின்ற போது, ‘பெட்டி ஒன்று வரும். அதை அம்மனாக கருதி வழிபடுங்கள். சிறுவனின் பார்வை கிடைக்கும்’ என அசரீரி ஒலித்தது.   

அதன்படியே குடில் ஒன்றை அமைத்து அங்கு பெட்டியை பிரதிஷ்டை செய்தனர். அம்மன் தவத்தில் இருப்பதால் நேரடியாக வழிபடுவதில்லை. குடிலின் முன்பு பீடம் அமைத்து சூலத்தையே வழிபடுகின்றனர். குலதெய்வம் தெரியாதவர்கள் மூங்கிலணை காமாட்சியை வழிபடுகின்றனர். ஆடி பள்ளய திருவிழா, மஹாசிவராத்திரி இங்கு விசேஷமாக கொண்டாடுகின்றனர்.    

எப்படி செல்வது: பெரியகுளத்தில் இருந்து 14 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 04546 – 293 765


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !