காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆடி பவுர்ணமி; கருட வாகனத்தில் சுவாமி
ADDED :22 minutes ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், கருட சேவையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும், யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியான இன்று கருட சேவை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு, கோவிலில் இருந்து, வாகன மண்டபத்திற்கு பெருமாள் எழுந்தருளினார். அலங்காரம் முடிந்து, யதோக்தகாரி பெருமாள் காலை, 6:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.