உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் படுகள விழா கோலாகலம்

திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் படுகள விழா கோலாகலம்

 திருவாலங்காடு: திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில், சும்பன் – நிசும்பனை வதம் செய்யும் படுகள விழா, நேற்று கோலா கலமாக நடந்தது.


திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது, திருவாலங்காடு பத்ர காளியம்மன் கோவில். ஆண்டுதோறும் ஆடி மாத முதல் செவ்வாயன்று, காளி உத்சவம் தொடங்கி, 9 நாட்கள் நடைபெறும். காளி உத்சவம் நடந்தால் மட்டுமே, வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் நடைபெற வேண்டும் என்பது மரபு. அத்தகைய சிறப்பு வாய்ந்த உத்சவ விழா, கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி, தொடர்ந்து எட்டு நாட்கள் அம்மன் வீதியுலாவுடன் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று காலை 5:30 மணிக்கு சும்பன், நிசும்பன் எனும் அரக்கர்களை அம்மன் படுகளம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதில், பேய் போன்ற வேடமிட்ட நபர், ஊர் மக்களை அச்சுறுத்துவது போன்றும், பின் அம்மன் பேயை வதம் செய்து கோபம் தணிவது போன்றும் களம் அமைக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, காலை 7:00 மணிக்கு, திருவாலங்காடின் முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் பத்ரகாளியம்மன் வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !