உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி விழா

சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி விழா

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசை நாளில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.


ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருப்பது சிறப்பாகும். இதன்படி சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் தாய், தந்தையை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் பரமபதநாதனாக எழுந்தருளினார். அப்போது சவுந்தரவல்லி தாயார் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்து பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதேபோல் அனைத்து கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் வைகை ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பலரும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !