உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்தரசி அம்மன் கோவில் விழாவில் கொம்பன் ஊர்வலம்

பட்டத்தரசி அம்மன் கோவில் விழாவில் கொம்பன் ஊர்வலம்

அன்னூர்: அன்னூரில் பட்டத்தரசி அம்மன் கோவிலில், கொம்பன் ஊர்வலம் நடந்தது.


அன்னூர், சத்தி சாலை, குட்டைப்புதூர், பட்டத்தரசி அம்மன், செல்லாண்டி அம்மன், அண்ணமார் சாமி கோவிலில், 51வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. கடந்த 23ம் தேதி, நள்ளிரவு 12:00 மணிக்கு, மந்த முனி பூஜை நடந்தது. 24ம் தேதி கொம்பன் ஊர்வலம், அன்னூர் நகரில் புறப்பட்டு, மெயின் ரோடு, சத்தி ரோடு வழியாக, பட்டத்தரசி அம்மன் கோவிலை அடைந்தது.


பக்தர்கள் வேல் ஏந்தி திடும் இசையுடன் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். வானவேடிக்கை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


இன்று (26 ம் தேதி) இரவு பச்சை வைத்தலும், 27ம் தேதி மதியம் மாரியம்மன், அங்காளம்மன் கோவிலில் இருந்து செல்லாண்டியம்மன் தேர், பட்டத்தரசி அம்மன் தேர் மற்றும் பக்தர்கள் அலகு குத்தி வலம் வருதல் நடைபெறுகிறது.


வருகிற, 28ம் தேதி அதிகாலையில் அணிக் கூடை எடுத்து வருதல், அம்மன் அழைப்பு நடைபெறுகிறது. பட்டத்தரசி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிளி பிடித்தல், கொம்பன் பூஜை நடைபெறுகிறது. மாலையில் களி பூஜையும், இரவு 7:00 மணிக்கு, படுகளம் சாய்த்தலும் நடைபெறுகிறது. 29ம் தேதி மதியம் மறுபூஜை நடைபெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !