கடலுார் குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
கடலுார்: கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
கடலுார் முதுநகர், செல்லங்குப்பத்தில், உப்பனாற்றங்கரையில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் கடந்த 2003ம் ஆண்டு புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேக நாளன்று திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது. காலை 8:00 மணிக்கு 108 சங்கு பிரதிஷ்டை, யாகசாலை பூஜை, 10:00 மணிக்கு, மூலவருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அருகில் உள்ள மண்டபத்தில் பூரணி புஷ்கா சமேத குட்டியாண்டருக்கு திருக்கல்யாணம் உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.