பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED :1 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் கிருத்திகை நாளான இன்று சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில் உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.