உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி உற்சவம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி உற்சவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி உற்சவம் துவங்கியது.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வேணுகோபாலன் ஜெயந்தி விழா 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முதல் நாளான நேற்று காலை 5:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 8:00 மணிக்கு ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபாலன் முத்து பந்தல் விமானத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பகல் 11:30 மணிக்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், நான்காயிர திவ்ய பிரபந்த சேவை சாற்றுமறை நடந்தது. மாலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மற்றும் சந்தான கோபாலன் குழந்தை கண்ணனாக கொடி மரத்தில் எழுந்தருளி, ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள், சுவாமிக்கு சங்கு பால் சமர்ப்பிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து ஆஸ்தானம் எழுந்தினர். இரவு 7:30 மணிக்கு ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபாலன் அம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 10ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !