உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் விழா துவக்கம்!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் விழா துவக்கம்!

புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி திருக்கொடியேற்றுடன் துவங்கியது. ஏப்ரல் 9ம் தேதி முடிய விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை ஆரம்பமாகிறது.விழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாளை அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், சந்தணக்காப்பு அலங்காரம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி ஏற்றப்பட்டு விழா துவங்குகிறது.விழாவில் ஒவ்வொரு நாளும் சிம்ஹ வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், அன்னவாகனம் போன்றவற்றில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 8ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்தொட்டு இழுக்க உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !