உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்!

வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்ச தீப திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனமும், 11 மணிக்கு ததியாராதனையும், மாலை 3 மணிக்கு பஜனை நடந்தது. மாலை 5 மணிக்கு லட்ச தீப திருவிழாவையொட்டி தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரமும், வடமாலை சாற்றுதலும் நடந்தது. மாலை 6 மணிக்கு பெருமாள், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடந்தது. அதற்கு முன்னதாக ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி தமிழ்புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் விஜயராகவஅய்யங்கார், ஸ்ரீஆஞ்சநேயர் கைங்கர்ய சபா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !