சந்திர கிரகணம் திருப்பரங்குன்றம் நடை சாத்தல்
ADDED :4566 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று (ஏப். 25) இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இரவு 1.20 மணிக்கு கோயிலில் இருந்து அஸ்தரதேவர் புறப்பாடாகி, சரவணப் பொய்கையில் எழுந்தருள்வார். அங்கு தீர்த்த உற்சவம் முடிந்து கோயில் திரும்புவார். நாளை(ஏப்., 26) அதிகாலை கிரகண பூஜைகள் முடிந்து வழக்கம் போல், 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும், என கோயில் துணைகமிஷனர் பச்சையப்பன் தெரிவித்து உள்ளார்.