இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு
ADDED :4555 days ago
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. பரம்பரை அறங்காவலர் குழுதலைவர் ராமமூர்த்திபூஜாரி தலைமை வகித்தார். கோயில் செயல்அலுவலர் தனபாலன், விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷினி முன்னிலை வகிக்க, கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக 19 லட்சத்து 52 ஆயிரத்தி 311ரூபாய், 102 கிராம் தங்கம், 212 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்து. கணக்கிடும் பணியில் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.