மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
4511 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4511 days ago
வல்லநாடு: கீழ வல்லநாடு அருள்தரும் மலை அபிதகுஜாலம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருணாச்சல சுவாமியின் நூதன கோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (6ம் தேதி) நடக்கிறது.வல்லநாடு தாமிரபரணி நதிக்கரையில் கீழவல்லநாடு அருள்தரும் மலையில் விநாயகர், அபிதகுஜலாம்பாள், அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருணாச்சல சுவாமிக்கு தனித்தனியாக கருங்கற்களால் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அருணாச்சல சுவாமிக்கு நூதன சிலையும் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் பிரமாண்ட விமானமும், கருவறை, சிற்ப வடிவங்களும் பல லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கோயில் கட்டுமான பணிகளை வேலாயுதம் ஸ்தபதி குழுவினரும், விமானம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளை குட்டி (எ) வேதநாயகம் ஸ்தபதி குழுவினரும் செய்துள்ளனர். இக்கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை முன்னிட்டு பிரமாண்ட பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து தேவதா அனுக்கை, வேத பாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும், நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம், அஷ்டலெட்சுமி பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலையில் தீர்த்த சங்கர்ணம், ம்ருத் சங்கர்ணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம்,எஜமான வர்ணம், ஆஜார்ய வர்ணம், வாஸ்துசாந்தி, பிரவேசவலி, கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், கடம் யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, வேத பாராயணம், தீபாராதனை நடந்தது.5ம் தேதியன்று காலையில் 2ம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலையில் 3ம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவில் யந்திர ஸ்தானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இரவு 8.30 மணிக்கு வாசுகி மனோகரனின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம்: கும்பாபிஷேக தினமான (5ம் தேதி) காலை 4.30 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, ஸ்பர்ஸாகுதி, யாத்ரா தானம், வேத பாராயணம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. காலை 6 மணிக்கு கும்பம் எழுந்தருளலும், காலை 7 மணிக்குள் அமிர்த யோகமும், அமிர்த வேளையும், சந்திரஹோரையும் கூடிய நேரத்தில் விநாயகர், அபிதகுஜலாம்பாள், அருணாச்சலேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், விமானத்திற்கும், புதிய சிலைகளுக்கும் வேதமந்திரங்கள், பஞ்சவாத்யங்கள் முழங்க, ஓதுவார் மூர்த்திகள் பஞ்சபுராணம் பாட விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை வல்லநாடு வெங்கடசுப்பிரமணியன் (எ) ரவிபட்டர் குழுவினர் நடத்தி வைக்கின்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ராமச்சந்திரன், இசக்கிமுத்து, அருணாச்சலம் மற்றும் கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம் பொதுமக்கள் செய்துள்ளனர்.
4511 days ago
4511 days ago