கோவில் திருவிழா
ADDED :4576 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ராஜாளிக்காட்டில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு பெருவிழாவையொட்டி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவிளக்கு போட்டும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில், அம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி, வேதை நகர் முழுவதும் வீதியுலா நடந்தது.