அம்மனுக்கு சந்தனக்காப்பு
ADDED :4610 days ago
புதுச்சேரி:குயவர்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் 119ம் நிறுவன ஆண்டு விழாவையொட்டி, அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5.00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்கார சிறப்பு பூஜை, 6.00 மணிக்கு இசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.00 மணிக்கு மின் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை டாக்டர் தில்லைச் சிதம்பரம் மற்றும் வியாபாரிகள், குயவர்பாளையம் பகுதி மக்கள் செய்திருந்தனர்.