திருநள்ளார் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4522 days ago
காரைக்கால்: திருநள்ளார், சனீஸ்வர பகவான் கோவிலில், தேரோட்டம் நேற்று நடந்தது.காரைக்கால், திருநள்ளார், தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவம், கடந்த 7 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 14ம் தேதி, அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வல நிகழ்ச்சி நடந்தது. கடந்த 16ம் தேதி, செண்பக தியாகராஜ சுவாமிகள், உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து, யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தேர் திருவிழா, நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள், "தியாகராஜா... தியாகராஜா... என, கோஷம் எழுப்பி, வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு வீதியில் தேர் புறப்பட்டு, வடக்கு, மேற்கு வீதி வழியாக வந்து, நிலையை அடைந்தது. விழாவையொட்டி, காரைக்கால் மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.