வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கருடசேவை
ADDED :4619 days ago
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில், புகழ் பெற்ற கருட சேவை உற்சவம் இன்று நடக்கிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத, பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் துவங்கியது. தங்கசப்பரமும், இரவு, சிம்ம வாகனமும், இரண்டாம் காப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இரண்டாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 4:00 மணிக்கு, ஹம்ச வாகனத்திலும், மாலை, சூரிய பிரபை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளினார். இன்று, காலை, 4:00 மணிக்கு, பிரபல உற்சவ மான, கருடசேவை உற்சவமும், அதை தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, கோபுர தரிசனமும் நடைபெற உள்ளது.