மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :4507 days ago
காரியாபட்டி: மல்லாங்கிணர் மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா, 10 நாட்கள் நடந்தது. பக்தர்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக, பூக்குழி இறங்குதல், பறவை காவடி எடுத்தனர். சர்வ அலங்காரம் செய்யப்பட்ட தேரில், அம்மன், அண்ணாநகர் என நான்கு ரத வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரும்பாலான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.