அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
ADDED :4493 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.ரிஷிவந்தியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்தி திருவீதியுலா நடந்தது. திருவிழாவின் 7ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கும் திருமுத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கடந்த 22ம் தேதி தேரோட்டம் நடந்தது.நேற்று முன்தினம் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. மாலை 4 மணிக்கு சுவாமி திருவீதியுலாவின் போது மஞ்சள்நீரை தெளித்து பக்தர்கள் கொண்டாடினர். இரவு நடந்த மகாதீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.