தெய்வங்கள் மானிடராகப் பிறந்து தெய்வமானவர்களா? அல்லது பிறவியிலே தெய்வங்களா?
ADDED :4618 days ago
கடவுள் பிறப்பு இறப்பு அற்றவர். அவர் நமக்காக அவ்வப்போது பிறப்பு எடுத்து மண்ணுயிர்களைக் காத்தருள்கிறார். அதையே அவதாரம் அல்லது
திருவிளையாடல் என்று குறிப்பிடுகிறோம். இது புராணக்கடவுளர்க்குப் பொருந்தும். மனிதராகப் பிறந்து மக்களுக்கு நல்வழிகாட்டிய அருளாளர்களையும் தெய்வமாகக் கருதி வழிபடுகிறோம். ராகவேந்திரர், வள்ளலார் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.