உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில்: ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம்

ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில்: ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம்

ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாசலசுவாமி திருக்கோலம் கோயில் வலம் வருதல் நடந்தது. இன்று (29ம் தேதி) காலை சேர்ம விநாயகர் திருஉலா, இரவு 8 மணிக்கு திருஆல வாகனத்தில் குறி சொல்லுதல் கூத்தன் அலங்காரத்தில் கோயில் வலம் வருதல் நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.வரும் 6ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலையில் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து 7ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 11 மணிக்கு கோயில் மூலஸ்தானம் சேருதல், கற்பூர தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 8ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !