மல்லிகா கிராமத்தில் ஆடி சிறப்பு பூஜை
ADDED :4533 days ago
உளுந்தூர்பேட்டை: மல்லிகா கிராம கோவிலில் ஆடி சிறப்பு பூஜைகள் நடந்தது. திருநாவலூர் ஒன்றியம் மல்லிகா கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாரதனைகள் நடந்தது. பெண்கள் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபட்டனர். ஆடி சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.