உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரளூரில் ஆடி உற்சவம்

கொரளூரில் ஆடி உற்சவம்

மயிலம்:மயிலம் அடுத்த கொரளூர் கிராமத்தில் பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்தது.இதையொட்டி அம்மனுக்கு காலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின், குளக்கரையிலிருந்து பக்தர்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 1 மணிக்கு கோவிலில் சாகை வார்த்தல், மாலையில் பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !