உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பேரம்பாக்கம்: காவாங்கொளத்தூர் சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் கோலகலமாக நடந்தது. திருவள்ளர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ளது காவாங்கொளத்தூர் கிராமம். இந்த கிராமத்தில்,  100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் சீனிவாச பெருமாள் கோவிலை புனரமைத்து, புதிய கோவில் கட்டி, மகா கும்பாபிஷேக விழா நேற்று கோலகலமாக நடந்தது.
முன்னதாக,  சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு விமான கலசம் மற்றும் புதிய படம் கரிக்கோல் ஊர்வலம் நடந்தது.  அதன் பின் மாலை 5:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனையும், திவ்ய பிரபந்த பாராயணம் கும்ப ஸ்தாபனமும், ஆராதனை பூஜைகளும், கலச அபிஷேகமும், வாஸ்து சாந்தி பூஜையும் நடந்தது. பின், நேற்று காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசன கோபூஜையும், கும்ப பூஜைகளும் நடந்தது. பின், காலை 8:30 மணியளவில் விமான பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பின், இரவு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !