கோதண்டராம சுவாமி கோவிலில் உறியடி திருவிழா கோலாகலம்!
ஊத்துக்கோட்டை: கோதண்டராம சுவாமி கோவிலில், 116வது ஆண்டு உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீகோதண்டராமசுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து, பூனர்பூச நட்சத்திரம் வரும் நாளில் உறியடி திகருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, 116வது ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவில், முன் அமர்ந்து அவர் முன் உறியடி திருவிழா நடந்தது. இதில் திரளானவர்கள் உறியை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சுற்றியிருந்த மக்கள் மஞ்சள் நீரை ஊற்றினர். தொடர்ந்து உற்வசர் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு செய்தது.