பெரும்பாலும் விநாயகரின் இருப்பிடம் மரத்தடியாக இருக்கிறதே ஏன்?
ADDED :4534 days ago
அரசமரத்தடியில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்வது வழக்கம். இயற்கையும் இறைவனும் ஒன்றே என்பதை குறி கும் விதத்தில் ஆற்றங்கரை, குளக்கரையில் விநாயகருக்கு கோயில் இருக்கும். இவர் மூலாதார மூர்த்தி என்பதால், மந்திர பிரதிஷ்டை இல்லாமலே எந்த இடத்திலும் எழுந்தருளி விடுவார். வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல் நமக்காக எங்கும் அருள்புரிய காத்திருக்கும் ஒரே தெய்வம் இவர் தான்.