புகழிமலையில் புரட்டாசி கிருத்திகை
ADDED :4391 days ago
வேலாயுதம்பாளையம்: புகழிமலை பாலசுப்ரமண்ய ஸ்வாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழா நடந்தது. உச்சி கணபதி, பாலசுப்ரமண்ய ஸ்வாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.