கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் ஸ்ரீவி ஆண்டாள் கோயில்!
ADDED :4371 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம், கும்பாபிஷேகத்திற்காக, வர்ணம் பூசப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, ராஜகோபுரத்தில் வர்ணம் பூசும் பணி, இரு ஆண்டுகளுக்கு முன், துவங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து, ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆண்டாள் கோயில் தங்க விமான பணி இன்னும் முடியாததால், கும்பாபிஷேகத்திற்கான நாள் அறிவிக்கப்படவில்லை.