உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார்குறிச்சி பகுதி கோயில்களில் பிரதோஷ விழா

ஆழ்வார்குறிச்சி பகுதி கோயில்களில் பிரதோஷ விழா

ஆழ்வார்குறிச்சி: கடையம் வட்டார கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது. * ரவணசமுத்திரம் சொக்கலிங்கநாதர் சமேத மீனாட்சியம்பாள் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் சுவாமி, அம்பாள் நந்தி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், தொடர்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், சிறப்பு தீபாராதனை நடந்தது. * கடையம் வில்வவனநாதர் சமேத நித்யகல்யாணி அம்பாள், கைலாசநாதர் சமேத பஞ்சகல்யாணி அம்பாள், சிவசைலம் சிவசைலநாதர் சமேத பரமகல்யாணி அம்பாள், ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் சமேத சிவகாமியம்பாள், நரசிங்கநாதர் சமேத ஆவுடையம்பாள் உட்பட கடையம் சுற்று வட்டார சிவன் கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !