கடையநல்லூர் கரடிமாடசுவாமி கோயிலில் கால்நாட்டும் வைபவம்
கடையநல்லூர்: கடையநல்லூர் கரடிமாடசுவாமி கோயில் கொடை விழா நாளை (22ம்தேதி) கால்நாட்டு வைபவத்துடன் தொடங்குகிறது. விழாவில் சிறப்புபெற்ற குற்றால தீர்த்தக்குட ஊர்வலம் வரும் 29ம்தேதி நடக்கிறது. விஷ்ணு அவதாரத்தின் 3வது அவதாரமாக பக்தர்களுக்கு அருள்பாவித்து வரும் வராக அவதாரத்துடன் லட்சுமிவராக மூர்த்தியாக கடையநல்லூரில் பக்தர்களுக்கு அருள்பாவித்து வரும் கரடிமாடசுவாமி கோயில் தமிழகத்தில் சிறப்புபெற்றதாகும்.தென் தமிழகத்தில் லட்சுமிவராக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாவிக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கொடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டு கொடை விழா நாளை (22ம் தேதி) இரவு 7 மணிக்கு கால்நாட்டு வைபவத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து 23ம்தேதி மஞ்சனை அலங்காரம், 24ம்தேதி காய்கறி அலங்காரம், 25ம்தேதி அன்னாபிஷேகம், 26ம்தேதி லட்டு அலங்காரம், 27ம்தேதி திருவிளக்கு பூஜை மற்றும் பழ அலங்காரம், 28ம்தேதி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், தொடர்ந்து மாலை 3 மணிக்கு பால்குட ஊர்வலம் நடக்கிறது. கொடை விழாவில் சிறப்புபெற்ற குற்றால தீர்த்தக்குட ஊர்வலம் வரும் 29ம்தேதி நடக்கிறது. அதனை தொடர்ந்து நள்ளிரவு சாமபூஜை நடக்கிறது. 30ம்தேதி காலை பொங்கல் பானை அழைப்பு மற்றும் சிறப்பு பூஜை, விசேஷ தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. கரடிமாடசுவாமி கோயில் கொடை ஏற்பாடுகளை மேலக்கடையநல்லூர் கரடிசித்தர் வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.