உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு 108 சங்காபிஷேகம்!

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு 108 சங்காபிஷேகம்!

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. சனி பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 10:45 மணிக்கு நந்தி பகவானுக்கு 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன் போன்ற 12 சிறப்பு பொருட்களால் அபிஷேகம், சங்காபிஷேகம் நடந்தது. அருகம்புல் மாலைகளால் அலங்கரித்து தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !