உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனை -2: தகுதிக்கு மீறி சிந்திக்காதீர்!

கிறிஸ்துமஸ் சிந்தனை -2: தகுதிக்கு மீறி சிந்திக்காதீர்!

நம் தரம் என்ன, தகுதி என்ன என்பதை தெரிந்தே நாம் வாழ்க்கை முறை அமைய வேண்டும். இல்லாவிட்டால், இந்தக் கழுதைக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும். ஒரு சலவைத்தொழிலாளி நான்கைந்து கழுதைகளையும், அவை பொதி சுமந்து செல்லும் போது, ஆங்காங்கே சென்றால், அவற்றை ஒழுங்குபடுத்த ஒரு நாயையும் வளர்த்தார். அந்த நாய் மீது அவருக்கு பிரியம் அதிகம். அவர் மீது கால்களை தூக்கி மேலே போடும். இதைப் பார்த்த கழுதைக்கு பொறாமை வந்துவிட்டது. "இந்த எஜமானுக்கு என்ன ஓரவஞ்சனை...நாம் இவ்வளவு பொதி சுமந்தும் நம்மிடம் என்றாவது கொஞ்சியிருக்கிறானா இவன் என்று எண்ணியது. தன் அன்பை தானே சென்று வெளிப்படுத்த எண்ணி, எஜமானன் வீட்டுக்குள் இருந்தபோது, உள்ளே சென்று அவர் மீது காலை தூக்கிப் போட்டது. இஷ்டம் போல் விளையாடியது. அவரது உடல் புண்ணாகி விட்டது. அருகில் இருந்தவர்கள், கழுதைக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகக் கருதி, கட்டி வைத்து அடித்தனர். இப்போது கழுதையின் உடம்பெல்லாம் புண். ""எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நியாயமோ, எதெது தூய்மையோ, எதெது அன்பிற்குரியதோ, எதெது நற்கீர்த்தியோ, எதெது பண்பொழுக்கமோ, எதெது போற்றுதலுக்கு உரியதோ அவற்றை சிந்தித்துக் கொண்டிருங்கள், என்கிறது பைபிள். தகுதிக்கு மீறிய சிந்தனைகள் ஆபத்தையே தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !