உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் மன்றத்தில் மார்கழி மாத பூச விழா

வள்ளலார் மன்றத்தில் மார்கழி மாத பூச விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் மார்கழி மாத பூச விழா நடந்தது. மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்துகருப்பன், நாராயணன், வைத்திலிங்கம், மருந்து வணிகர் சங்க தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் ராஜேந்திரன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் தமிழ்மணி அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சைவசித்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம், உழவார திருக்கூட தலைவர் சின்னதம்பி, நடேசன், கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !