உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருத்தணியில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த, புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மலைக்கோவிலில் குவிந்ததால், ஏழு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தரிசனம் நடந்தது. விழாவை ஒட்டி அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து, 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று மலைக்கோவிலில் புத்தாண்டு தரிசனத்திற்காக குவிந்தனர். பொதுவழியில் பக்தர்கள் மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில், ஏழு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், 150 ரூபாய் டிக்கெட் பெற்று சிறப்பு தரிசனத்தில், மூன்று மணி நேரம் காத்திருந்தும் பக்தர்கள் தரிசித்தனர். இரவு, 8:00 மணிக்கு தங்கதேரில், உற்சவ பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பாதுகாப்பிற்காக, 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !