உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  திருவதிகை ஆதிகுணபரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 திருவதிகை ஆதிகுணபரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பண்ருட்டி: திருவதிகை ஆதிகுணபேரஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பண்ருட்டி அடுத்த திருவதிகையில் நீலாயதாட்சாயிணி அம்பிகை உடனுறை ஆதிகுணபரேஸ்வரர் கோவில் திருப்பணிகள் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் 32 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்தது. திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த 2ம் தேதி காலை அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக பூஜை, அக்னி, இரவு முதல் யாக சாலை பூஜை. நேற்று 2ம் கால யாக பூஜை, மாலை 3ம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 4ம் கால யாக பூஜை, கும்ப பூஜை, யாத்ராதானம், மகா பூர்ணாகுதி நடந்து, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், ஆடிட்டர் தியாகராஜன், தி.மு.க., கவுன்சிலர்கள் கதிர்காமன், சண்முகவள்ளிபழனி, கிருஷ்ணராஜ், கவுரிஅன்பழகன், கோவில் நிரவாக அலுவலர் ராஜ்குமார், ஆய்வாளர் ஸ்ரீதேவி, வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், டாக்டர் ஸ்ரீதர், தொழில் வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !