பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4262 days ago
திருவட்டாறு: கேசவபுரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.