உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி: பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில்,  கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரம் கிராமத்தில் உள்ள, பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில், கடந்த, 4ம் தேதி கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவில் வளாகத்தில், மூன்று யாக சாலை, 108 கலசங்கள் வைத்து, யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு கும்பாராதனம், ஆஞ்சநேய ஹோமம் நடந்தது. காலை, 8:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதியதாக அமைக்கப்பட்ட பெரு மாள், அனுமன் மூர்த்தி களுக்கு கலச நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, பஜனைக் குழுவினர் பக்தி பாடல்கள், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதில், திருத்தணி, கார்த்திகேயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !