உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானூர் பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மானூர் பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில், மன்னார்சாமி சமேத பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த  10 ம் தேதி மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கும்,  மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று காலை  7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 10.20 மணிக்கு மூலவர் பச்சைவாழியம்மன் , பரிவார மூர்த்திகள், முனி சிலைகள், குதிரை சிலை, மன்னார்சாமி,  கோவில் நுழைவு வாயில் வளைவு ஆகியவற்றிற்கு  புனித கலச நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !